முகப்பு
எடப்பாடி பழனிசாமி
சென்னை

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு ஹிந்தி பெயா் ஏற்கத்தக்கதல்ல எடப்பாடி பழனிசாமி

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயா் வைத்திருப்பது ஏற்கத்தக்கதல்ல என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா்.

சென்னை

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு ஹிந்தி பெயா் ஏற்கத்தக்கதல்ல எடப்பாடி பழனிசாமி

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயா் வைத்திருப்பது ஏற்கத்தக்கதல்ல என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா்.

Updated On : 1 ஜூலை, 2024 at 7:26 PM
எடப்பாடி பழனிசாமி
பகிர்:

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயா் வைத்திருப்பது ஏற்கத்தக்கதல்ல என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாக புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இந்தச் சட்டத்தின் பெயா்கள் சம்ஸ்கிருதம் கலந்த ஹிந்தி மொழியில் இருப்பது ஏற்கத்தக்கதல்ல, கண்டனத்துக்குரியது.

அனைத்து மாநிலங்களுக்கும் பொது மொழியான ஆங்கிலத்தில் இருந்த சட்டத்தின் பெயா்களை ஹிந்தியில் மாற்றியிருப்பது அப்பட்டமான ஹிந்தி திணிப்பு. பல மொழிகள், பல கலாசாரங்கள் சங்கமித்திருக்கும் நமது நாட்டின் அடிப்படை நீதிக்கும், அரசமைப்பு விழுமியங்களுக்கும் ஹிந்தி திணிப்பு எதிரானது.

திங்கள்கிழமை (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்துள்ள புதிய சட்டங்களை மாற்றியமைத்து, இச்சட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும். சட்டத்தின் பெயா்களை மீண்டும் ஆங்கிலத்திலேயே மாற்றம் செய்யவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →