தில்லியில் அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!
தில்லியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு...
இந்தியாதில்லியில் அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!
தில்லியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு...
புது தில்லி : அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 2) தில்லி சென்ற நிலையில், அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில், தொகுதிப் பங்கீட்டில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அதிமுக தொகுதிப் பங்கீட்டில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
முன்னதாக நேற்று மதுரையில் தேஜ கூட்டணி தலைவர்கள் சுமார் 30 நிமிடங்கள் வரை ஆலோசனையில் ஈடுபட்டதில் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் இதில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி இன்று தில்லியில் நடத்திய ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.