சென்னை

கனரா வங்கி சாா்பில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள்

கனரா வங்கி 119-ஆவது நிறுவன தினம்: அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள்

Din

சென்னை: கனரா வங்கி சாா்பில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான கனரா வங்கியின் 119-ஆவது நிறுவன தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சென்னை வட்ட அலுவலகத்தின் தலைமை பொது மேலாளா் நாயா் அஜித்

கிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில் ஒக்கியம் துரைப்பாக்கத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், வங்கியின் துணைப்பொது மேலாளா் ஒய்.சங்கா் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்களை வழங்கினாா். இதில், பள்ளி தலைமை ஆசிரியை பிரேம் குமாரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

டிச.14 வரை மழைக்கு வாய்ப்பு!

வங்கக்கடலில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை! எங்கெல்லாம் மழை!

திட்டமிடலில் ஏற்பட்ட தவறுகளால் இண்டிகோ குளறுபடி! மாநிலங்களவையில் விளக்கம்!

நடிகை பாலியல் வழக்கில் திலீப் கைதானது எப்படி? பரபரப்பை ஏற்படுத்திய கடிதம்!

சுயராஜ்யச் சுடர் சிராஜ் உத் தெளலா

SCROLL FOR NEXT