ஜி.டி. விரைவு ரயில் மீண்டும் சென்ட்ரலில் இருந்து இயக்கம்
சென்னை சென்ட்ரல் - புது தில்லி இடையே இயக்கப்படும் கிராண்ட் ட்ரங் (ஜி.டி) விரைவு ரயில் ஜூலை 23-ஆம் தேதி முதல் சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும்.
சென்னை: சென்னை சென்ட்ரல் - புது தில்லி இடையே இயக்கப்படும் கிராண்ட் ட்ரங் (ஜி.டி) விரைவு ரயில் ஜூலை 23-ஆம் தேதி முதல் சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும்.
சென்னை ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால் சில விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன் ஒருபகுதியாக சென்னையில் இருந்து புது தில்லி செல்லும் கிராண்ட் ட்ரங் விரைவு ரயில் மே 9-ஆம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டது. அடுத்த 3 மாதங்களுக்கு இந்த மாற்றம் அமலில் இருக்கும் என தெற்கு ரயில்வே முன்பு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், ஜூலை 23-ஆம் தேதி முதல் கிராண்ட் ட்ரங் விரைவு ரயில் தாம்பரத்தில் இருந்து இயக்குவதற்கு பதிலாக சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படவுள்ளது. மேலும், புது தில்லியில் இருந்து ஜூலை 21-ஆம் தேதி புறப்படும் ரயில் தாம்பரம் வருவதற்கு பதிலாக சென்னை சென்ட்ரல் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.