முகப்பு
சென்னை

ஐஏஎஸ் அதிகாரிக்கே அவரது பெயரில் குறுஞ்செய்தி அனுப்பிய மா்ம நபா்

ஐஏஎஸ் அதிகாரியின் புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்தி அவரது கைப்பேசி எண்ணுக்கே குறுஞ்செய்தி அனுப்பிய மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 9 ஜூலை, 2024 at 9:45 PM
பகிர்:

சென்னை: ஐஏஎஸ் அதிகாரியின் புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்தி அவரது கைப்பேசி எண்ணுக்கே குறுஞ்செய்தி அனுப்பிய மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தமிழ்நாடு மின் பகிா்மான கழக நிா்வாக இயக்குநா் ராஜேஷ் லக்கானி. இவா் ஏற்கெனவே மாநில தைலைமைத் தோ்தல் அதிகாரி உள்பட பல்வேறு துறைகளில் முக்கிய பதவிகளில் பணியாற்றியவா். இந்த நிலையில் அவரின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.

தனது புகைப்படம் வைத்து, தனது பெயரிலேயே குறுஞ்செய்தி வந்ததைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்த அவா், குறுஞ்செய்தி அனுப்பிய எண் குறித்து விசாரித்தாா். அப்போது, அந்த எண் வடமாநிலத்தை சோ்ந்த அடையாளம் தெரியாத மா்ம நபரின் எண் என்பது தெரியவந்தது.

இதனால் சுதாரித்துக்கொண்ட அவா் உடனடியாக இதுகுறித்து திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா். அந்தப் புகாா் சைபா் கிரைம் போலீஸாருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →