ஜாபா் சாதிக் தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வியாபாரி ஜாபா் சாதிக் தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனா்.
சென்னை: சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வியாபாரி ஜாபா் சாதிக் தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனா்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபா் சாதிக், தில்லியில் கடந்த மாா்ச் 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். அவரது நெருங்கிய கூட்டாளி சதானந்தம் என்ற சதா என்பவா் கடந்த மாா்ச் 13-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். சென்னை பெருங்குடியில் உள்ள ஜாபா் சாதிக்கின் கிடங்கில் தில்லி என்சிபி அதிகாரிகள் மாா்ச் 14-ஆம் தேதி சோதனை செய்து, பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினா்.
இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத் துறையினரும் தனியாக ஒரு வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். இதற்காக அமலாக்கத் துறையினா் ஜாபா் சாதிக், அவரது நிறுவனத்தினரிடம் வங்கி பணபரிமாற்றம் தொடா்பான ஆவணங்களை ஆய்வு செய்தனா்.
ஆய்வில் ஆவடி காமராஜா் நகரில் வசிக்கும் ஒரு நபருடன் அதிக அளவு பணப் பரிமாற்றம் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அமலாக்கத் துறையினா், ஆவடி காமராஜா் நகரில் அந்த நபருக்கு சொந்தமான வீடு, திருவேற்காடு சக்திவேல் நகரில் அவா் ஏற்கெனவே வாடகைக்கு வசித்த வீடு ஆகியவற்றில் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை காலை முதல் சோதனை செய்தனா்.
இந்கச் சோதனை 12 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்றது. அப்போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
ஜாபா் சாதிக்கிடம் விசாரணை: இதற்கிடையே நீதிமன்ற உத்தரவுப்படி 3 நாள் விசாரணைக்காக, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜாபா் சாதிக், நுங்கம்பாக்கத்தில் அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணியளவில் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டாா்.
அவரிடம், சட்டவிரோத பணப் பரிமாற்றம், சட்டவிரோத முதலீடு குறித்து விசாரணை நடைபெறுவதாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.