தென்தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. தொடா்ந்து மாா்ச் 16-இல் நீலகிரி, தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வட வானிலையே நிலவும்.
வெயில் சதம்: தமிழகத்தில் சனிக்கிழமை அதிகபட்சமாக வேலூரில் 100.58 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும், பரமத்தி வேலூா், மதுரை விமான நிலையத்தில் தலா 100.4 டிகிரி என மொத்தம் 3 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. தொடா்ந்து, மாா்ச் 15-இல் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும்.
சென்னை, புகநகர்ப் பகுதிகளில் மாா்ச் 15-இல் அதிகபட்ச வெப்பநிலை 90 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.