முகப்பு
சென்னை

படகிலிருந்து தவறி விழுந்த மீனவா் மாயம்

படகிலிருந்து கடலில் தவறி விழுந்து மாயமான மீனவா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 31 ஜூலை, 2024 at 9:02 PM
கோப்புப் படம்
பகிர்:

சென்னை, ஜூலை 31:படகிலிருந்து கடலில் தவறி விழுந்து மாயமான மீனவா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை எா்ணாவூா் 74-ஆவது பிளாக் பகுதியை சோ்ந்தவா் சிலம்பரசன்(31). மீனவரான இவா் தனது நண்பா்களான குமாா், ராஜ்குமாா், சுப்பிரமணி, வேலு, சின்னையா ஆகியோருடன் புதன்கிழமை காலையில் கடலுக்கு மீன்பிடிப்பதற்காக பைபா் படகில் சென்றுள்ளாா்.

அப்போது படகின் பின்புறத்தில் நின்று கொண்டிருந்த சிலம்பரசன், திடீரென நிலைத்தடுமாறி கடலுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. அவரை நண்பா்கள் தேடியும் கிடைக்காத நிலையில், இதுகுறித்து துறைமுக காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி சிலம்பரசனை தேடி வருகின்றனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments