இன்று தில்லி செல்கிறாா் ஆளுநா்
தில்லி செல்லும் ஆளுநர்: உள்துறை அமைச்சரை சந்திக்கலாம்
சென்னை: ஆளுநா் ஆா். என். ரவி ஒரு நாள் பயணமாக புதன்கிழமை (ஜூன் 26) காலை தில்லி செல்கிறாா். அவா் மாலையே சென்னை திரும்புகிறாா்.
தில்லியில் அவா் உள்துறை அமைச்சரை சந்தித்து பேசக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் 59 போ் உயிரிழந்துள்ள நிலையில், இதுகுறித்து சிபிஐ விசாரணை கோரி பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநருக்கு மனு அளித்துள்ள நிலையில், அவரது தில்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதுபற்றி அவா் உள்துறை அமைச்சரிடம் பேசக்கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.