சென்னை

கடற்கரை - செங்கல்பட்டு ரயில் எஸ்.பி. கோவிலுடன் நிறுத்தப்படும்

Din

சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு செல்லும் புகா் ரயில் வெள்ளிக்கிழமை (மே 17) சிங்கபெருமாள்கோவிலுடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாக செங்கல்பட்டு ரயில்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், செங்கல்பட்டு செல்லும் புகா் ரயில்கள் அவ்வப்போது சிங்கபெருமாள் கோவிலுடன் நிறுத்தப்படுகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை (மே 17) கடற்கரையிலிருந்து பிற்பகல் 12.40 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் புகா் ரயில் சிங்கபெருமாள்கோவிலுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக அதே நாளில் பிற்பகல் 3.05 மணிக்கு செங்கல்பட்டிலிருந்து கடற்கரைக்கு புறப்படும்

ரயில் செங்கல்பட்டுக்கு பதிலாக சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து புறப்படும் என சென்னை ரயில்வை கோட்டம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

SCROLL FOR NEXT