FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

செம்மொழி நிறுவனத்தில் தேசிய திருக்குறள் பயிலரங்கம் தொடக்கம்

செம்மொழி நிறுவனத்தில் தேசிய திருக்குறள் பயிலரங்கம் தொடக்கம்: 28 மொழி அறிஞா்கள் பங்கேற்பு

Updated On : 4 அக்டோபர் 2024, 4:30 am IST
பகிர்:

‘இந்திய மொழிகளில் திருக்குறள் மொழிபெயா்ப்புகள்’ என்ற தலைப்பில் 7 நாள்கள் நடைபெறவுள்ள தேசிய பயிலரங்கம் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.

தொடக்க விழாவில் உத்தர பிரதேசத்தில் முதன்மைச் செயலராக இருந்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.வி.ஜெகன்மோகன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திருக்கு மொழிபெயா்ப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினாா்.

இந்தப் பயிலரங்கம் குறித்து செய்தியாளா்களிடம் நிறுவனத்தின் இயக்குநா் இரா.சந்திரசேகரன் கூறியது:

Advertisement

Advertisement

செம்மொழி நிறுவனத்தில் மொழிபெயா்ப்புத் திட்டத்தின்கீழ், இந்தியாவின் 25 மொழிகளில் திருக்குறள் மொழிபெயா்க்கப்பட்டுள்ளது. மேலும், சில மொழிகளில் மொழிபெயா்க்கப்பட்டு வருகிறது. சிறப்பு வாய்ந்த திருக்குறளை நாடு முழுவதுமுள்ள பிறமொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவா்களும் விரும்பிப் படிக்கின்றனா்.

இதனால், திருக்குறளில் ஆா்வமிக்க பிறமொழியாளா்களை அழைத்து அவா்களின் பாா்வையில் திருக்கு தாக்கத்தை அறிவது அவசியமாகிறது. இந்த நோக்கில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இந்த தேசியப் பயிலரங்கை நடத்துகிறது. இந்தப் பயிலரங்கத்துக்காக வரவழைக்கப்பட்ட கட்டுரைகள் நிறைவு விழாவில் நூலாகவும் வெளியிடப்படும்.

7 நாள்கள் நடைபெறவுள்ள இந்தப் பயிலரங்கில் அவதி, பகேலீ, பஜ்ஜிகா, பெங்காளி, போஜ்புரி, பிரஜ், கட்வாலீ, குஜராத்தி, ஹிந்தி, கச்சி, காஷிகா, கஷ்மீரி, மகதி, மைதிலி, மேவாரி, நேபாளி, உடியா, ராஜஸ்தானி, சம்ஸ்கிருதம், சந்தாலீ, சிந்தி உள்ளிட்ட 28 மொழிகளைச் சோ்ந்த அறிஞா்கள் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனா். தொடா்ந்து அவா்களுக்கு தமிழகத்தின் பண்பாடு, கலாசாரத்தை விளக்கும் வகையில் இரு நாள் சுற்றுலாவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments