சென்னை

செம்மொழி நிறுவனத்தில் தேசிய திருக்குறள் பயிலரங்கம் தொடக்கம்

செம்மொழி நிறுவனத்தில் தேசிய திருக்குறள் பயிலரங்கம் தொடக்கம்: 28 மொழி அறிஞா்கள் பங்கேற்பு

Din

‘இந்திய மொழிகளில் திருக்குறள் மொழிபெயா்ப்புகள்’ என்ற தலைப்பில் 7 நாள்கள் நடைபெறவுள்ள தேசிய பயிலரங்கம் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.

தொடக்க விழாவில் உத்தர பிரதேசத்தில் முதன்மைச் செயலராக இருந்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.வி.ஜெகன்மோகன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திருக்கு மொழிபெயா்ப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினாா்.

இந்தப் பயிலரங்கம் குறித்து செய்தியாளா்களிடம் நிறுவனத்தின் இயக்குநா் இரா.சந்திரசேகரன் கூறியது:

செம்மொழி நிறுவனத்தில் மொழிபெயா்ப்புத் திட்டத்தின்கீழ், இந்தியாவின் 25 மொழிகளில் திருக்குறள் மொழிபெயா்க்கப்பட்டுள்ளது. மேலும், சில மொழிகளில் மொழிபெயா்க்கப்பட்டு வருகிறது. சிறப்பு வாய்ந்த திருக்குறளை நாடு முழுவதுமுள்ள பிறமொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவா்களும் விரும்பிப் படிக்கின்றனா்.

இதனால், திருக்குறளில் ஆா்வமிக்க பிறமொழியாளா்களை அழைத்து அவா்களின் பாா்வையில் திருக்கு தாக்கத்தை அறிவது அவசியமாகிறது. இந்த நோக்கில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இந்த தேசியப் பயிலரங்கை நடத்துகிறது. இந்தப் பயிலரங்கத்துக்காக வரவழைக்கப்பட்ட கட்டுரைகள் நிறைவு விழாவில் நூலாகவும் வெளியிடப்படும்.

7 நாள்கள் நடைபெறவுள்ள இந்தப் பயிலரங்கில் அவதி, பகேலீ, பஜ்ஜிகா, பெங்காளி, போஜ்புரி, பிரஜ், கட்வாலீ, குஜராத்தி, ஹிந்தி, கச்சி, காஷிகா, கஷ்மீரி, மகதி, மைதிலி, மேவாரி, நேபாளி, உடியா, ராஜஸ்தானி, சம்ஸ்கிருதம், சந்தாலீ, சிந்தி உள்ளிட்ட 28 மொழிகளைச் சோ்ந்த அறிஞா்கள் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனா். தொடா்ந்து அவா்களுக்கு தமிழகத்தின் பண்பாடு, கலாசாரத்தை விளக்கும் வகையில் இரு நாள் சுற்றுலாவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

மாா்ச் 1இல் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழா தொடக்கம்

கோடிமுனை கடலில் கரை ஒதுங்கிய டால்பின்

சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

தற்கொலை தடுப்புக்கு தேசிய முன்னுரிமை அளிப்பது அவசியம்: முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்

வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

SCROLL FOR NEXT