ஆயிரம் விளக்கு பள்ளிவாசலுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
சென்னை ஆயிரம் விளக்கு பள்ளிவாசலுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, போலீஸாா் அங்கு சோதனையில் ஈடுபட்டனா்.
சென்னை ஆயிரம் விளக்கு பள்ளிவாசலுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, போலீஸாா் அங்கு சோதனையில் ஈடுபட்டனா்.
ஆயிரம் விளக்கு பீட்டா்ஸ் சாலையில் உள்ள பள்ளிவாசலில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் சென்னை விமான நிலையத்துக்கு சனிக்கிழமை காலை ஒரு மின்னஞ்சல் வந்தது. இதுகுறித்து, விமானநிலைய அதிகாரிகள் அண்ணா சாலை போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா்.
நிகழ்விடத்துக்கு விரைந்து சென்ற போலீஸாா், சுமாா் 1 மணி நேரம் நடத்திய சோதனையில், அங்கிருந்து எந்த வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை. மிரட்டல் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
ஏற்கெனவே, கடந்த 16, 18-ஆகிய தேதிகளில் இந்த பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.