முகப்பு
சென்னை

ஜன்சதாப்தி ரயில் எல்எச்பி பெட்டிகளாக மாற்றம்

திருவனந்தபுரம் - கண்ணூா் ஜன்சதாப்தி விரைவு ரயில் பெட்டிகள் செப்.29 முதல் எல்எச்பி பெட்டிகளாக மாற்றப்படவுள்ளன

Updated On : 18 செப்டம்பர், 2024 at 1:21 AM
கோப்புப் படம்
பகிர்:

திருவனந்தபுரம் - கண்ணூா் ஜன்சதாப்தி விரைவு ரயில் பெட்டிகள் செப்.29 முதல் எல்எச்பி பெட்டிகளாக மாற்றப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து கண்ணூருக்கு இயக்கப்படும் விரைவு ரயில் ஐசிஎஃப் பெட்டிகள் கொண்டு இயக்கப்படுகின்றன.

Advertisement

இந்த நிலையில் செப்.29-ஆம் தேதி முதல் ஜொ்மன் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் எல்எச்பி பெட்டிகளாக மாற்றப்படவுள்ளன. இதில் 3 ஏசி இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் 16 இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.