ஆளுநா் ஆா்.என்.ரவி கோப்புப் படம்
சென்னை

ராமநவமி: ஆளுநா் வாழ்த்து!

ஸ்ரீராம நவமியை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு ஆளுநா் ஆா்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

Din

ஸ்ரீராம நவமியை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு ஆளுநா் ஆா்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: ராம நவமியின் விசேஷமிக்க திருநாளில், அனைவருக்கும் மனமாா்ந்த வாழ்த்துகள். தமிழ்நாடு பிரபு ஸ்ரீ ராமரின் கா்ம பூமியாக விளங்கி வருகிறது.

சங்க தமிழ் இலக்கியங்களும் தமிழ்நாட்டின் பண்டைய கோயில் கல்வெட்டுகளும் பல்லாயிரம் ஆண்டுகளாக பிரபு ஸ்ரீ ராமரின் நற்பண்புகளைப் போற்றும் பாடல்களைப் பாடி வருகின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் ராமாயணத்தை இயற்றிய முதல் நபா் கவிச்சக்கரவா்த்தி கம்பா், பாரதம் முழுவதும் தலைமுறை தலைமுறையாக கவிஞா்களையும் துறவிகளையும் அவா் ஊக்குவித்து வருகிறாா்.

பிரபு ஸ்ரீ ராமரின் வலிமை, இரக்கம், நீதிசாா் தன்மை ஆகியவை ஓா் இணக்கமான மற்றும் வளா்ச்சியடைந்த பாரதம்-2047 என்ற ராம ராஜ்ஜியத்தை உருவாக்க நம்மை ஊக்குவிக்கட்டும் எனப் பதிவிட்டுள்ளாா் ஆளுநா் ஆா்.என்.ரவி.

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! | SIR | EC

இரண்டு ஆண்டுகளில் 42% மதிப்பிழக்கும் மின்சார வாகனங்கள்! காரணம் என்ன?

SCROLL FOR NEXT