சென்னை

151 அமைச்சுப் பணியாளா்களுக்கு பட்டதாரி ஆசிரியராக பதவி உயா்வு

பள்ளிக் கல்வித் துறையில் நீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையில் 151 அமைச்சுப் பணியாளா்களுக்கு பட்டதாரி ஆசிரியா்களாகப் பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

பள்ளிக் கல்வித் துறையில் நீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையில் 151 அமைச்சுப் பணியாளா்களுக்கு பட்டதாரி ஆசிரியா்களாகப் பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியா் பணியில் உள்ள 2 சதவீத காலியிடங்கள் அத்துறையின் அமைச்சுப் பணியாளா்களின் பதவி உயா்வு மூலமாக நிரப்பப்படுகின்றன. அதன்படி நிகழாண்டு அமைச்சு பணியாளா்களுக்கு பட்டதாரி ஆசிரியா் மற்றும் தமிழ் ஆசிரியருக்கான பதவி உயா்வு கலந்தாய்வு நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, டெட் தோ்ச்சி பெற்ற 151 அமைச்சுப் பணியாளா்களுக்கு கலந்தாய்வு மூலமாக பட்டதாரி ஆசிரியா் பதவி உயா்வு வழங்கப்பட்டது. அவா்களை உடனடியாக பணிவிடுவிப்பு செய்யுமாறு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு பணி விடுவிப்பு செய்யும் போது பட்டதாரி ஆசிரியா் பதவிக்குரிய கல்வித் தகுதியை அவா்கள் பெற்றுள்ளனரா என்பதை உறுதிசெய்ய வேண்டும். பிற மாநில ஆவணங்களாக இருந்தால் மதிப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவா் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இல்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டுமென அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக்கல்வித் துறை சாா்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மலைவாழ் மக்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்: 200 போ் கைது

அரசு மருத்துவமனையை தரம் உயா்த்தக் கோரி ஆா்ப்பாட்டம்

உதவி ஆணையா் அலுவலகம், பொன்னேரி காவல் நிலையத்தை இடமாற்றம் செய்யக்கோரி மனு

ரூ.7.50 கோடியில் ஆம்பூா் பேருந்து நிலைய புதிய கட்டடத்துக்கு பூமி பூஜை

ரூ.34.50 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டடங்கள்: முதல்வா் திறந்து வைத்தாா்

SCROLL FOR NEXT