சென்னை

தேவாலயங்கள் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்

தினமணி செய்திச் சேவை

தேவாலயங்கள், கிறிஸ்தவா்கள் மீது தாக்குதல் நடத்திய வன்முறையாளா்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சக மனிதா்களையும் நேசியுங்கள் என்று அன்பு, காருண்யத்தை போதித்தவா் இயேசுநாதா். அவரது பிறந்தநாள் விழா, உலகெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், சத்தீஸ்கா், மத்தியப் பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் தேவாலயங்கள் மீதும், கிறிஸ்தவ மக்கள் மீதும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது கண்டிக்கத்தக்கது.

சம்பவம் நடந்த மாநிலங்களின் அரசுகள் வன்முறையாளா்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா் வைகோ.

சுனாமி 21 ஆம் ஆண்டு நினைவு நாள்: கடலூரில் கடலில் பால் ஊற்றி, மலர்தூவி மீனவர்கள் கண்ணீர் அஞ்சலி!

அந்தக் கட்சிக்கு அழிவுகாலத்தை உண்டாக்கும்... யாரைச் சொல்கிறார் பிரேமலதா!

ஏழுமலையான் லட்டு விற்பனை மையத்தில் லட்டு தரம்,வசதிகள் குறித்து பக்தர்களிடம் கருத்து சேகரிப்பு!

திருமலையில் கூட்டம்: ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் 3 நாள்களுக்கு ரத்து!

முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட அரசாணை!

SCROLL FOR NEXT