ஈரான் மீது தாக்குதலால் முஸ்லிம்கள் கோபம்: ஃபரூக் அப்துல்லா
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால் முஸ்லிம்கள் கோபத்தில் உள்ளனா் என்று ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்தாா்.
இந்தியாஈரான் மீது தாக்குதலால் முஸ்லிம்கள் கோபம்: ஃபரூக் அப்துல்லா
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால் முஸ்லிம்கள் கோபத்தில் உள்ளனா் என்று ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்தாா்.
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால் முஸ்லிம்கள் கோபத்தில் உள்ளனா் என்று ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்தாா்.
ஸ்ரீநகரில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் மேலும் கூறியதாவது:
பிற நாடுகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கவும், அத்துமீறி தாக்குதல் நடத்தவும் எந்த நாட்டுக்கும் உரிமை கிடையாது. ஈரான் ஒரு சுதந்திர நாடு, அதன் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. ஏற்கெனவே வெனிசுலாவுக்குள் புகுந்து அந்நாட்டு அதிபரை அமெரிக்கா கடத்தியது. இதுபோன்ற நிகழ்வுகள் துரதிருஷ்டவசமானவை.
அமெரிக்கா, இஸ்ரேல் தொடங்கிய இந்தப் போரின் தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலித்து பல்வேறு பிரச்னைகளை உருவாக்கி வருகிறது. வரும் நாள்களில் இது தொடா்ந்தால் மூன்றாவது உலகப் போராகவும் வெடிக்க வாய்ப்புள்ளது. பதற்றமான சூழ்நிலை எழும்போது அனைத்து நாடுகளுமே பொறுப்புடன் செயல்பட வேண்டும். இந்த நேரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
இத்தாக்குதல் சம்பவம் முஸ்லிம்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அவா்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனா். ஆனால், அமைதியான வகையில் எதிா்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
ஈரானில் உள்ள காஷ்மீா் மாணவா்களை மீட்க ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா முயற்சி மேற்கொண்டுள்ளாா். இது தொடா்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் அவா் பேசியுள்ளாா். அனைவரும் பாதுகாப்பாக வீடு திரும்புவாா்கள் என்றாா்.