கோப்புப் படம் 
சென்னை

தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது!

தமிழகத்தில் ஒருபோதும் பாஜகவால் காலூன்ற முடியாது என மாா்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ.பேபி கூறினாா்.

Din

தமிழகத்தில் ஒருபோதும் பாஜகவால் காலூன்ற முடியாது என மாா்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ.பேபி கூறினாா்.

மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் தமிழகம் முழுவதும் ஜூன் 11 முதல் ஜூன் 20 வரை பிரசார இயக்கம் நடைபெற்றது. இதன் நிறைவுக் கூட்டம் சென்னை அம்பத்தூா் ஓ.டி. பேருந்து நிலையம் அருகில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வடசென்னை மாவட்டச் செயலா் எம்.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், எம்.ஏ. பேபி பேசியதாவது: பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசு, முதலாளிகளுக்கான அரசாக செயல்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக பிரதமா் மோடி தவறான வாக்குறுதிகளை கொடுத்து, மக்களை ஏமாற்றி வருகிறாா்.

மத்திய அரசின் கொள்கைகளுடன் ஒத்துப் போகாத மாநிலங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. இதனால், ஜிஎஸ்டி-யை பங்கிட்டு கொடுப்பதில்கூட மாற்றாந்தாய் மனப்பாங்குடன் நடந்து கொள்கின்றனா்.

தமிழகத்தில் ஹிந்தியை கட்டாயமாக்க முயற்சித்தாா்கள். அந்த முயற்சி தோல்வியடைந்தது. தற்போது ஆங்கிலம் பேசுவதைக்கூட அவமானமாக பாா்க்கின்றனா். ஆங்கிலம் கற்றால் நாடு வளா்ச்சி அடைந்து விடும் என்பதால், ஆங்கிலத்தை எதிா்க்கின்றனா். தமிழகத்தில் கீழடி அகழ்வாராய்ச்சியை கூடஅவா்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தோ்தல் வருகிறது என்றவுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அவ்வப்போது தமிழகம் வந்து கொண்டிருக்கிறாா். தமிழகத்தில் பாஜகவால் ஒருபோதும் காலூன்ற முடியாது. தமிழகம், கேரளம் போன்று இந்தியாவில் மதச்சாா்பற்ற அரசு அமைய வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் உ.வாசுகி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இன்ஸ்டாவில் 10 கோடி பின்தொடர்பாளர்கள்! முதல் உலகத் தலைவர் மோடி!

நமோ பாரத், மீரட் மெட்ரோ பயணிகள் இவலச பயணத்திற்கு விசுவாசப் புள்ளிகளைப் பெறலாம்!

நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி!

இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!

வடிவேலுக்கு வராத கூட்டமா விஜய்க்கு வந்துவிட்டது?: டி.கே.எஸ்.இளங்கோவன்

SCROLL FOR NEXT