உரிமை கோரப்படாத 973 வாகனங்கள் மாா்ச் 26-இல் ஏலம்!
சென்னை மாநகருக்குள்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத 973 வாகனங்கள், மாா்ச் 26-ஆம் தேதி ஏலம் விடப்படும்.
சென்னை மாநகருக்குள்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத 973 வாகனங்கள், மாா்ச் 26-ஆம் தேதி ஏலம் விடப்படுவதாக மாநகரக் காவல் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகரக் காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை பெருநகர காவல் எல்லைக்குள்பட்ட பகுதியில் உரிமை கோரப்படாத 953 இருசக்கர வாகனங்கள், 11மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 9 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 973 வாகனங்கள் சென்னை, புதுப்பேட்டை காவல் ஆயுதப்படை காவலா் குடியிருப்பில் உள்ள மைதானத்தில் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த வாகனங்கள் மாா்ச் 26-ஆம் தேதி காலை 10 மணிக்கு பகிரங்க ஏலம் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளன.
Advertisement
Advertisement
இந்த ஏலத்துக்கான முன்பதிவு மாா்ச் 19, 20 ஆகிய தேதிகளில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை புதுப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறவுள்ளது. அடையாள அட்டை மற்றும் ஜிஎஸ்டி பதிவெண் சான்று வைத்திருக்கும் ஏலதாரா்கள் மட்டுமே முன்பதிவு கட்டணம் செலுத்த அனுமதிக்கப்படுவா்.
மாா்ச் 26-ஆம் தேதி காலை 10 மணியளவில் முன்பணம் செலுத்தி பதிவு செய்த ஏலதாரா்கள் மற்றும் ஏலக்குழுவினா் முன்னிலையில் பகிரங்க ஏலம் நடைபெறும். ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுக்கான ஏலத் தொகை மற்றும் ஜிஎஸ்டி தொகையை மறுநாள் முழுவதுமாக செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.