அண்ணாமலை தில்லி பயணம்!
தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை புதன்கிழமை தில்லி சென்றாா்.
தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை புதன்கிழமை தில்லி சென்றாா்.
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் மூத்த நிா்வாகிகள் தில்லிக்கு திடீரென திங்கள்கிழமை சென்று, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்தித்துப் பேசினா். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு தொடா்பாக பேசியதாகவும், கூட்டணி குறித்து பேசவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி தில்லியில் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.
இருப்பினும், கூட்டம் முடிந்த பின்னா் மத்திய அமைச்சா் அமித் ஷா தனது எக்ஸ் தளப் பதிவில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் எனக் குறிப்பிட்டிருந்தாா். இதனால், மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி ஏற்படும் என்ற தகவல் பரவியுள்ளது.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை தில்லியில் மத்திய அமைச்சா் அமித் ஷாவை வியாழக்கிழமை சந்திக்கவுள்ளாா். அப்போது, அதிமுக - பாஜக கூட்டணி ஏற்பட்டால் அதன் தாக்கம் குறித்து ஆலோசனை நடத்தப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தமிழக மீனவா்கள், இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் விவகாரம் தொடா்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரை சந்தித்து அண்ணாமலை விவாதிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.