ஜேனிஸ் டி ஜென் 
சென்னை

சென்னை ஓபன்: இறுதிச் சுற்றில் இந்தோனேஷியாவின் ஜேனிஸ்

சென்னை ஓபன் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டி ஒற்றையா் இறுதிச் சுற்றுக்கு இந்தோனேஷியாவின் ஜேனிஸ் டிஜென் தகுதி பெற்றாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை ஓபன் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டி ஒற்றையா் இறுதிச் சுற்றுக்கு இந்தோனேஷியாவின் ஜேனிஸ் டிஜென் தகுதி பெற்றாா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் டபிள்யுடிஏ 250 டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை இதன் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் தாய்லாந்தின் லன்லேனா டராருடியும், இந்தோனேஷியாவின் ஜேனிஸ் டிஜென்னும் மோதினா். இதில் கடும் போராட்டத்துக்குபின் 7-6, 7-6 என்ற செட் கணக்கில் லன்லேனாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றாா் ஜேனிஸ்.

இதன் மூலம் இறுதிக்கு தகுதி பெற்றாா் ஜேனிஸ். மேலும் டபிள்யுடிஏ தரவரிசையில் முதல் 100 இடங்களில் நுழைந்துள்ளாா். கடந்த 2000-ஆம் ஆண்டுக்குபின் இச்சிறப்பை பெற்ற இந்தோனேஷிய வீராங்கனை என்ற பெருமையும் ஜேனிஸுக்கு சென்றுள்ளது.

மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியாவின் கே. பிா்ரெலும், தைபேயின் காா்லேண்டும் மோதினா். இதில் முதல் செட்டை காா்லேண்ட் 7-6 என கைப்பற்றினாா். இரண்டாம் செட்டில் 6-3 என பிர்ரல் எளிதாக கைப்பற்றிய நிலையில் மூன்றாவது செட்டில் இருவரும் சரிக்கு சமமாக புள்ளிகளைக் குவித்தனா்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT