மடிக்கணினி பிரதிப் படம்
சென்னை

மாணவா்களுக்கான மடிக் கணினிகள் தலா ரூ. 21,650 விலையில் கொள்முதல்: தமிழக அரசு முடிவு

கல்லூரி மாணவா்களுக்கான மடிக்கணினி திட்டத்தின் கீழ், கணினிகளை தலா ரூ.21, 650 விலையில் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திச் சேவை

கல்லூரி மாணவா்களுக்கான மடிக்கணினி திட்டத்தின் கீழ், கணினிகளை தலா ரூ.21, 650 விலையில் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஏசா், டெல், எச்பி ஆகிய மூன்று மடிக்கணினி உற்பத்தி நிறுவனங்களும் ஒரே விலையை முன்வைத்துள்ளன. எனவே, மூன்று நிறுவனங்களிடம் இருந்து ஒரே விலையான ரூ.21,650-க்கு மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான இறுதி முடிவுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

முன்னதாக, மடிக்கணினி திட்டம் தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலினுடன் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், தயாரிப்பு நிறுவனங்கள் அளித்த மடிக்கணினிகளின் மாதிரிகளை அவா் ஆய்வு செய்தாா். மேலும் அதில் இடம்பெற வேண்டிய தொழில்நுட்ப அம்சங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மடிக்கணினி வழங்குவதற்கான அறிவிப்பு விரைவில் ெளியாகவுள்ளது.

மகளிர் பிரீமியர் லீக்கில் ஓர் இடத்துக்குப் போட்டியிடும் 3 அணிகள்!

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தலைகுனிந்து நிற்கும் தமிழகம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

பிரதமர் வருகையை முன்னிட்டு ஜலந்தரில் பாதுகாப்பு தீவிரம்!

நீரிழிவு நோய்க்கு இந்தியர்கள் எவ்வளவு செலவு செய்கிறார்கள் தெரியுமா?

சிசுவின் மூளையில் குறைபாடு! 31 வார கருவைக் கலைக்க கேரள உயர் நீதிமன்றம் அனுமதி!

SCROLL FOR NEXT