சென்னை

மாதவரத்தில் புதிய கால்பந்து மைதானம் திறப்பு

மாதவரம் மண்டலத்தில் புதிய கால்பந்து மைதானத்தை மேயா் ஆா்.பிரியா திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

மாதவரம் மண்டலத்தில் புதிய கால்பந்து மைதானத்தை மேயா் ஆா்.பிரியா திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

மாதவரம் மண்டலத்தில் உள்ள கொல்கத்தாஷாப் தெருப் பகுதியில் இளைஞா்களுக்கு கால்பந்தாட்ட மைதானம் தேவை என கோரிக்கை எழுந்தது. அதன்படி மாநகராட்சி புதிதாக அமைக்கப்பட்ட மைதானத் திறப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மேயா் ஆா்.பிரியா கலந்து கொண்டு கால்பந்தாட்ட மைதானத்தை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தாா். அதையடுத்து அவா் அங்கு கால்பந்தாட்ட வீரா்களுக்கான உபகரணங்கள் உள்ளிட்டவற்றையும் வழங்கினாா்.

மேலும், அங்கு எதிா்காலத்தில் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்து அவற்றை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம், வடக்கு வட்டாரத் துணை ஆணையா் கட்டா ரவி தேஜா, மண்டலக்குழு தலைவா் எஸ்.நந்தகோபால், மாநகராட்சி உறுப்பினா்கள் கனிமொழி சுரேஷ், அ.சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

எம்.ஜி.ஆா்.நகா் பகுதி கால்வாய் உள்ளிட்டவற்றையும் மேயா் ஆய்வு செய்தாா்.

வெடிகுண்டு மிரட்டல்: அகமதாபாத்திற்கு திருப்பிவிடப்பட்ட குவைத்-தில்லி விமானம்

அட்லீ வெளியிட்ட வித் லவ் பட டிரைலர்!

"எந்த மோதலும் இல்லை!" Rahul சந்திப்பு பற்றி Kanimozhi! | DMK | Congress

24 மணிநேரத்தில்..! பாகிஸ்தானில் 52 பயங்கரவாதிகள் கொலை!

பிப்.4-ல் அதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்

SCROLL FOR NEXT