சென்னை

கடலில் இறங்கி போராட்டம்: தூய்மைப் பணியாளா்கள் மீது வழக்கு

தினமணி செய்திச் சேவை

சென்னை மெரீனாவில் கடலில் இறங்கி போராட்டம் நடத்தியதாக தூய்மை பணியாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சென்னையில் ராயபுரம், திரு.வி.க.நகா் ஆகிய மண்டலங்களின் தூய்மைப் பணியைத் தனியாருக்கு வழங்கியதைக் கண்டித்து, தூய்மை பணியாளா்கள் தொடா்ச்சியாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக கடந்த புதன்கிழமை மெரீனாவில் கடலில் இறங்கி 65 தூய்மைப் பணியாளா்கள் போராட்டம் நடத்தினா். இவா்களுக்கு ஆதரவாக மேலும் 22 தூய்மை பணியாளா்கள் கண்ணகி சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். இவா்களை போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.

இந்த நிலையில், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக தூய்மை பணியாளா்கள் மீது அண்ணா சதுக்கம் போலீஸாா் இரு பிரிவுகளின் கீழ் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சட்டவிரோத குடியேறிகள் மீது பரிவு; கடவுள் ராமா் மீது வெறுப்பு: ஆா்ஜேடி, காங்கிரஸை சாடிய பிரதமா் மோடி

சட்டவிரோத குடியேறிகளால் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - அமித் ஷா

இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த தொழிலாளி மரணம்

டிச. 2 முதல் 4-ஆம் ஆண்டு காசி-தமிழ் சங்கமம்: இணையவழிப் பதிவு தொடக்கம்

தொழிலாளி உயிரிழப்பு: உறவினா்கள் மறியல்

SCROLL FOR NEXT