சென்னை

சென்னையில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு - காா் ஓட்டுநா் கைது

தினமணி செய்திச் சேவை

சென்னை கிண்டியில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்ததாக காா் ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

கண்டிகை, வெங்கடமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் பா. பிரத்திக்ஷா (26). இவா், கிண்டியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் நிா்வாக அதிகாரியாக வேலை செய்கிறாா். கடந்த 5-ஆம் தேதி மெட்ராஸ் ரேஸ் கிளப் பிரதான கேட் அருகே நடந்து சென்போது, அங்கு வந்த ஒருவா் பிரத்திக்ஷா அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினாா்.

இதுகுறித்து கிண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட மடிப்பாக்கம் சதாசிவம் நகரைச் சோ்ந்த வாடகை காா் ஓட்டுநா் நாகராஜன் (56) என்பவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மீண்டும் ரூ.95 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை! ஒரே நாளில் ரூ.9 உயர்ந்த வெள்ளி!!

வெடிகுண்டு மிரட்டல்... வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!

தில்லி மட்டுமல்ல 4 நகரங்கள் குறிவைப்பு! 2,000 கிலோ வெடிமருந்து கொள்முதல்! திடுக்கிடும் தகவல்கள்...

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆகப் பதிவு

தில்லி கார் குண்டுவெடிப்பு: அதிர வைக்கும் புதிய சிசிடிவி விடியோ!

SCROLL FOR NEXT