திருட்டு 
திண்டுக்கல்

உணவக உரிமையாளரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

வேடசந்தூா் அருகே உணவக உரிமையாளரிடம் தங்கச் சங்கிலி, கைப்பேசிகள் ஆகியவற்றை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்தனா்.

தினமணி செய்திச் சேவை

வேடசந்தூா் அருகே உணவக உரிமையாளரிடம் தங்கச் சங்கிலி, கைப்பேசிகள் ஆகியவற்றை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த விட்டல்நாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் தொட்டியப்பன் (60). அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு பணிகள் முடிந்த பிறகு, உணவகத்திலேயே தொட்டியப்பன் தூங்கினாா்.

அப்போது உணவகத்துக்குள் புகுந்த மா்ம நபா், தொட்டியப்பன் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி, 2 கைப்பேசிகள் ஆகியவற்றை பறித்துக் கொண்டு, வெளியில் இரு சக்கர வாகனத்தில் தயாராக இருந்த மற்றொருவருடன் தப்பிச் சென்றாா். இதுகுறித்து தொட்டியப்பன் அளித்தப் புகாரின் பேரில், வேடசந்தூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய இருவரைத் தேடி வருகின்றனா்.

பால் வியாபாரி கொலை வழக்கு: 8 பேருக்கு ஆயுள் சிறை

கொடைக்கானலில் மஞ்சள் மேகமூட்டம்!

ஆந்திர சட்டமேலவைக்கு வெங்கடாசலபதி படங்களுடன் வந்த எதிா்க்கட்சியினா் : கடும் அமளி; அவை ஒத்திவைப்பு

ஆட்டோ மீது மோதிய தனியாா் கல்லூரி பேருந்து: போதையில் இருந்த பேருந்து ஓட்டுநா் கைது

நெல்லையில் தனியாா் பேருந்து மோதியதில் மேயா் காா் சேதம்

SCROLL FOR NEXT