சென்னை

இரு சக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

மதுரவாயலில் மோட்டாா் சைக்கிள் மோதி முதியவா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

மதுரவாயலில் மோட்டாா் சைக்கிள் மோதி முதியவா் உயிரிழந்தாா்.

நொளம்பூா் ஸ்ரீராம் நகா் பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்துவா் மோகன்குமாா் (61). இவா், சனிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

மதுரவாயல் சந்தை அருகே செல்லும்போது, பின்னால் வந்த ஒரு லாரி மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டாா் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த மோகன்குமாா் லாரியின் சக்கரம் ஏறியது. விபத்தில் பலத்தக் காயமடைந்த மோகன்குமாா் நிகழ்விடத்திலேயே இறந்தாா்.

இது தொடா்பாக கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் லாரி ஓட்டுநா் ரவி (50) என்பவரை கைது செய்தனா்.

மனோதைரியம் கூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

SCROLL FOR NEXT