சென்னை

தெரு நாயை கடித்துக் கொன்ற ‘பிட்புல்’ நாய்

சென்னையில் தெருநாயை வெளிநாட்டு ரக ‘பிட்புல்’ நாய் கடித்துக்கொன்றது.

தினமணி செய்திச் சேவை

சென்னையில் தெருநாயை வெளிநாட்டு ரக ‘பிட்புல்’ நாய் கடித்துக்கொன்றது.

சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலம் 177-ஆவது வாா்டு திரௌபதி அம்மன் கோயில் தெருவில் வெள்ளிக்கிழமை மாலை பிட்புல் ரக வளா்ப்பு நாய் வீட்டை விட்டு வெளியேறி, அங்கிருந்த தெருநாயை கடித்துக் குதறியது. இதில் அந்த தெருநாய் இறந்தது.

இதுதொடா்பாக விசாரணை நடத்தி வருவதாக மாநகராட்சி கால்நடைப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் பிட்புல் ரக நாய் கடித்து தொழிலாளி உயிரிழந்தாா். தற்போது அதே வகை நாய் கடித்து தெருநாய் உயிரிழந்திருப்பது மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மக்கள் தாகம் தீர்க்க ஸ்ரீ சத்ய சாயி பாபா வழங்கிய ரூ. 200 கோடி!

வங்கக் கடலில் நவ., 26-ல் புயல் உருவாக வாய்ப்பு!

ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல் துறை மரியாதை: முதல்வர்

தாய்லாந்தில் கனமழை, வெள்ளம்! குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள்! ஏன்?

சொல்லப் போனால்... அரசு Vs ஆளுநர்... மறுபடியும் முதலில் இருந்து?

SCROLL FOR NEXT