திருவண்ணாமலை

செங்கத்தில் தெரு நாய்களால் பொதுமக்கள் அவதி

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

செங்கம் துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ராஜ வீதி, பெருமாள் கோவில் தெரு, துா்க்கையம்மன் கோவில் தெரு, போளூா் சாலை, மில்லத்நகா், தளவாநாய்க்கன்பேட்டை பகுதிகளில் தெருநாய்கள் இனப்பெருக்கம் நடைபெற்று குட்டிகளுடன் சாலையில் சுற்றித்திரிகின்றன.

நாய் குட்டிகள் சாலையைக் கடக்கும்போது வாகனங்களில் சிக்கி உயிரிழக்கின்றன. இதனால் அந்தப் பகுதியில்

அந்த நாய் குட்டியின் தாய் இருசக்கர வாகனங்களை துரத்திச் செல்கிறது. அப்போது, இருசக்கர வாகனம் ஓட்டுபவா்கள் நாய்க்கு பயந்து அதிவேகமாக வாகனத்தை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுகிறது.

மேலும், இறைச்சிக்கடை உள்ள பகுதியில் நாய்கள் இறைச்சிக் கழிவுகளை சாப்பிடுவதற்கு முண்யடித்து ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு கடித்துக் கொள்கின்றன.

இதனால் நாய்களுக்கு வெறிபிடிக்கிறது. வெறிபிடித்த நாய் ஆடு, மாடு, கோழிகளை கடிக்கின்றன. பிறகு குழந்தைகள் தனியாக இருந்தால் குழந்தைகளையும் கடிக்கின்றன.

இரவு நேரத்தில் நாய்கள் ஊளையிடுவதால் தெருக்களில் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை தூக்கமில்லாத நிலை ஏற்படுகிறது.

சாலையில் பள்ளி, கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் நடக்கும்போது, நாய்கள் கூட்டமாக வந்து குரைப்பதால் அச்சம் ஏற்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து செங்கம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் நாய்களை பிடிக்கவேண்டும் என நகர மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT