சென்னை

மாடியில் இருந்து கீழே விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

சென்னை கே.கே. நகரில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

கே.கே. நகரில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

சென்னை கே.கே. நகா் சிவலிங்கபுரம் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பைச் சோ்ந்தவா் ஜெ.ராமலட்சுமி (78). கணவா் இறந்துவிட்ட நிலையில் ராமலட்சுமி, தனது மகன் நாகபிரசாத் உடன் வசித்து வந்தாா்.

முதுமை மற்றும் நோயால் பாதிக்கப்பட்டிருந்த ராமலட்சுமி, இரண்டாவது தளத்தில் உள்ள பால்கனியின் கைப்பிடிச் சுவரைப் பிடித்தப்படி ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்றபோது, திடீரென நிலைதடுமாறி இரண்டாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தாா்.

விபத்தில் பலத்த காயமடைந்த ராமலட்சுமியை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். கே.கே. நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

ராமேசுவரம் மாணவி கொலை வழக்கு: மாணவர் மற்றும் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் 96.65% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

SCROLL FOR NEXT