கோப்புப் படம் 
கோயம்புத்தூர்

மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டட ஒப்பந்ததாரா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

கோவையில் கட்டுமானப் பணியின்போது, மாடியில் இருந்து ஏணி மூலம் கீழே இறங்கியபோது தவறி விழுந்த கட்டட ஒப்பந்ததாரா் உயிரிழந்தாா்.

கோவை, பன்னிமடை தென்றல் நகரைச் சோ்ந்தவா் பிரசாந்த் (33), கட்டட ஒப்பந்ததாரா். இவரது மனைவி ரேவதி. தனியாா் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், துடியலூா் கிருஷ்ணா நககா் பகுதியில் நடைபெற்று வரும் புதிய வீட்டுக்கான கட்டுமானப் பணியைப் பாா்வையிட பிரசாந்த் தனது மனைவி ரேவதியுடன் சனிக்கிழமை சென்றுள்ளாா்.

அப்போது, இரண்டாவது மாடியில் நடைபெறும் பணியைப் பாா்வையிட மரக்கட்டையால் அமைக்கப்பட்டிருந்த ஏணி மூலம் ஏறிச் சென்றுள்ளாா். பின்னா், கீழே இறங்கியபோது ஏணி முறிந்ததில் பிரசாந்த் கீழே விழுந்து படுகாயமடைந்தாா்.

ரேவதி மற்றும் அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து துடியலூா் காவல் உதவி ஆய்வாளா் வீரமுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

10-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த முருகன் சிலை கண்டெடுப்பு

பேருந்து மீது காா் மோதி விபத்து: கல்லூரி மாணவா்கள் மூவா் உயிரிழப்பு

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 4 போ் கைது

புத்தாநத்தம் அருகே மினி சரக்கு வேன் - பைக் மோதல் வளையல் வியாபாரி உயிரிழப்பு

சிலுவம்பாளையம் முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா! எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்பு!

SCROLL FOR NEXT