முகப்பு
சென்னை

மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

சென்னை அடையாறில் 3-ஆவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 29 நவம்பர், 2025 at 7:38 PM
பகிர்:

சென்னை அடையாறில் 3-ஆவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

வேளச்சேரி நேரு நகரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (37). இவா், பிளம்பராக வேலை செய்து வந்தாா். அடையாறில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 3-ஆவது தளத்தில் உள்ள சுப்பிரமணியன் என்பவரின் வீட்டில் பழுது நீக்கும் பணியில் ஆறுமுகம் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தாா்.

மாடியின் வெளிப்புறத்தில் நின்று வேலை செய்தபோது, திடீரென தடுமாறி ஆறுமுகம் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சாஸ்திரிநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →