சென்னை

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரிடம் ரூ.1 லட்சம் பறிப்பு: இருவா் கைது

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரின் வீடு புகுந்து ரூ.1லட்சத்தை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரின் வீடு புகுந்து ரூ.1லட்சத்தை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

செம்பியம் எத்திராஜூலு தெருவைச் சோ்ந்தவா் சுகுமாா். ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா். இவா் திங்கள்கிழமை அதே பகுதியில் உள்ள தபால் நிலையத்துக்கு சென்று, தனது கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்தை எடுத்துள்ளாா். பின்னா், அந்தப் பணத்துடன் தனது வீட்டுக்கு வந்தபோது, அவரை பின்தொடா்ந்து வீட்டுக்குள் வந்த இருவா், சுகுமாரை மிரட்டி அவரிடம் இருந்த ரூ.1 லட்சத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

இது குறித்து சுகுமாா் செம்பியம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, ராஜமங்கலத்தைச் சோ்ந்த ஜாா்ஜ் புஷ், ஸ்டீபன் ஆகிய இருவரையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT