கோப்புப் படம் 
சென்னை

ஆவணப் பதிவு மூலம் ஒரே நாளில் ரூ. 274.41 கோடி வருவாய் ஈட்டி சாதனை

ஆவணப் பதிவு மூலம் ஒரே நாளில் ரூ.274.41 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

ஆவணப் பதிவு மூலம் ஒரே நாளில் ரூ.274.41 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பதிவுத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஆவணி மாத சுபமுகூா்த்த தினமான வியாழக்கிழமை (செப்.4) கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதன்மூலம், பதிவுத் துறை வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவில் நிகழ் நிதியாண்டில், ஒரே நாளில் அரசுக்கு ரூ.274.41 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னதாக, நிகழ் நிதியாண்டில் கடந்த 30-ஆம் தேதி பதிவுத் துறையில் ஒரே நாளில் அரசுக்கு ரூ.272.32 கோடி வருவாய் ஈட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது தெரிவிக்கப்பட்டுள்ளது.

3-வது முறையாக இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா; இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!

பிகார் முதல்வர் பதவி அவர்களின் மகன்களுக்கு அல்ல! - லாலு, சோனியாவை சீண்டிய அமித் ஷா

சூடானில் 460 பேரைக் கொன்ற துணை ராணுவப் படை!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம்!

புஷ்கர் கால்நடை கண்காட்சி! ரூ. 35 லட்ச ரூபாய்க்கு விற்பனையான எருமை “யுவராஜ்!”

SCROLL FOR NEXT