மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்! செப்.9 முதல்..!
சென்னையில் வரும் 9-ஆம் தேதி முதல் அக். 19 -ஆம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...
சென்னையில் வரும் 9-ஆம் தேதி முதல் அக். 19 -ஆம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவை வழக்கமாக இயக்கப்படும் 7 நிமிஷ இடைவெளிக்கு பதிலாக 14 நிமிஷ இடைவெளியில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் பச்சை மற்றும் நீல வழித்தடங்களில் வருடாந்திர பராமரிப்புப் பணிகள் வரும் செப். 9 முதல் அக். 19- ஆம் தேதி வரை காலை 5 முதல் மாலை 6.30 மணி நடைபெறவுள்ளது.
இதனால், அந்த நேரங்களில் மெட்ரோ ரயில்கள் வழக்கமாக இயக்கப்படும் 7 நிமிஷ இடைவெளிக்குப் பதிலாக 14 நிமிஷ இடைவெளியில் இயக்கப்படும். அதேநேரம், மாலை 6.30 மணிக்குப் பிறகு, வழக்கம்போல் இயக்கப்படும்.
Advertisement
Advertisement
மேலும், தகவல்களுக்கு 1860-425-1515 என்ற தொலைபேசி எண் அல்லது இணையதளத்தைப் பாா்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.