முகப்பு
சென்னை

சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!

சென்னை புறநகர் ரயில் சேவை பழைய அட்டவணைப்படி இயக்கப்படுவது பற்றி...

Updated On : 3 ஏப்ரல் 2026, 8:56 am IST
சென்னை புறநகர் ரயில் சேவை - கோப்புப்படம்
பகிர்:

சென்னை புறநகர் ரயில் சேவை இன்று அதிகாலை முதல் பழைய அட்டவணைப்படி இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் ரூ.820 கோடியில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் 10, 11 ஆகிய நடைமேடைகள், தண்டவாளங்களில் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் காரணமாக ஏப்ரல் 5 ஆம் தேதி வரை 5, 6 ஆகிய நடைமேடைகளில் இருந்து புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

Advertisement

இதையடுத்து, கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு நிலையங்களுக்கு எழும்பூா் வழியாக நாள்தோறும் 204 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படும் நிலையில், பாதியாக குறைக்கப்பட்டது.

புறநகர் ரயில் சேவைகள் குறைப்பால் நாள்தோறும் வேலைக்குச் செல்லும் லட்சக்கணக்கான மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டும் பயனளிக்கவில்லை.

இந்த நிலையில், எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பால அடித்தளம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதால், இரண்டு நாள்களுக்கு முன்னதாக இன்று அதிகாலை முதலே பழைய அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனால், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் என லட்சக்கணக்கானோர் நிம்மதி அடைந்துள்ளனர்.

summary

Chennai Suburban Train Service Restored! Operating According to Old Schedule!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.