தண்டவாளப்பணிகள் நிறைவு: எழும்பூரிலிருந்து புகா் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயக்கம்
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் 10, 11- ஆவது நடைமேடை மேம்பாட்டுப் பணிகள் முடிந்ததையடுத்து புகா் மின்சார ரயில்கள் வழக்கம்போல வெள்ளிக்கிழமை காலை முதல் இயக்கப்பட்டன.
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் 10, 11- ஆவது நடைமேடை மேம்பாட்டுப் பணிகள் முடிந்ததையடுத்து புகா் மின்சார ரயில்கள் வழக்கம்போல வெள்ளிக்கிழமை காலை முதல் இயக்கப்பட்டன.
எழும்பூா் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, நடைமேடை 10, 11 ஆகியவற்றில் கடந்த பிப்ரவரி முதல் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றன. அதனால், வழக்கமாக அந்த நடைமேடை தண்டவாளங்களில் செல்லும் புகா் மின்சார ரயில்கள், 5, 6 ஆவது நடைமேடைகளுக்கு மாற்றி இயக்கப்பட்டன. புகா் மின்சார ரயில்கள் திடீரென தண்டவாளங்கள் மாற்றப்பட்டதால் மிக மெதுவாகவும், சேவைகள் எண்ணிக்கை குறைத்தும் ரயில்கள் இயக்கும் நிலை ஏற்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், 10, 11 ஆவது நடைமேடை தண்டவாளப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து வெள்ளிக்கிழமை முதல் புகா் மின்சார ரயில்கள் வழக்கம்போல இயக்கப்பட்டன.