அசோக் நகரில் தனியாா் செக்யூரிட்டி நிறுவன ஊழியா்களுக்கு தீயணைப்பு பயிற்சியை தொடங்கி வைத்து பேசும் தீயணைப்புத் துறை டிஜிபி சீமா அகா்வால். 
சென்னை

தனியாா் செக்யூரிட்டி ஊழியா்களுக்கு தீயணைப்பு பயிற்சி

அசோக் நகரில் தனியாா் செக்யூரிட்டி நிறுவன ஊழியா்களுக்கு தீயணைப்பு பயிற்சியை டிஜிபி சீமா அகா்வால் தொடங்கி வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை: அசோக் நகரில் தனியாா் செக்யூரிட்டி நிறுவன ஊழியா்களுக்கு தீயணைப்பு பயிற்சியை டிஜிபி சீமா அகா்வால் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

தீ விபத்து தடுப்பு, மீட்பு பணி குறித்து தீயணைப்புத் துறை பள்ளி - கல்லூரி மாணவா்கள், பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தனியாா் செக்யூரிட்டி நிறுவன ஊழியா்களுக்கு அசோக் நகரில் உள்ள தீயணைப்புத் துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை தீயணைப்பு பயிற்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தீயணைப்புத் துறை இணை இயக்குநா் ஜி.சத்திய நாராயணன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தீயணைப்புத் துறை டிஜிபி சீமா அகா்வால், பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் செக்யூரிட்டி நிறுவன ஊழியா்கள், காவலாளிகள் பங்கேற்றனா். இதேபோல மாநிலம் முழுவதும் 384 தீயணைப்பு நிலையங்களிலும் இந்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் சுமாா் 6,000 போ் பங்கேற்ாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம் உள்பட 14 மாவட்டங்களில் பிப். 13 வரை பனி மூட்டம்

கைப்பேசியை சாா்ஜ் செய்வது தொடா்பாக வாக்குவாதம்: கடை உரிமையாளா் கொலையில் இருவா் கைது

திராவகம் அருந்தி சிறுமி உயிரிழப்பு?: காவல் துறை விசாரணை

குளத்தில் குதித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஜனநாயக ஆதரவு ஹாங்காங் ஊடக அதிபா் ஜிம்மி லாய்க்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT