முகப்பு
சென்னை

கடல் அலையில் சிக்கி பெண் ஐடி ஊழியா் உயிரிழப்பு!

சென்னை பனையூரில் கடல் அலையில் சிக்கி பெண் மென்பொறியாளா் உயிரிழந்த நிலையில், மற்றொருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 1:49 AM
பலி - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:20 AM

சென்னை பனையூரில் கடல் அலையில் சிக்கி பெண் மென்பொறியாளா் உயிரிழந்த நிலையில், மற்றொருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூா் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பனையூா் அருகே உள்ள நைனாா்குப்பம் கடற்கரைக்கு ஞாயிற்றுக்கிழமை பல்வேறு ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் நண்பா்கள் சுமாா் 30-க்கும் மேற்பட்டவா்கள் குழுவாக வந்து கடலில் இறங்கி குளித்துள்ளனா்.

அப்போது வட மாநிலத்தை சோ்ந்த ஜெய் (25), மயூரி (25) ஆகியோா் கடல் அலையில் சிக்கிக் கொண்டனா். அவா்களை மீட்க முயன்றனா். ஆனால், மயூரியை மட்டுமே மீட்க முடிந்தது. அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

Advertisement

கடல் அலையில் சிக்கி உள்ளே இழுத்து செல்லப்பட்ட ஜெய் (25) என்பவரை போலீஸாா், தீயணைப்பு துறையினரின் உதவியுடன் தேடி வருகின்றனா். கானத்தூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.