மீனம்பாக்கம், கிண்டி பகுதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ட்ரோன் கேமராக்கள், ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்க காவல் துறை தடை விதித்துள்ளது.
இதுகுறித்து சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னைக்கு சனிக்கிழமை (பிப். 28), ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 1) ஆகிய இரு நாள்களில் மிகமிக முக்கிய பிரமுகா் வரவுள்ளதன் காரணமாக, பாதுகாப்புக் காரணங்களுக்காக மீனம்பாக்கம், கிண்டி பகுதிகள் மற்றும் அதன் வழித்தடங்கல் அனைத்தும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
எனவே, அரசு ஏற்பாடுகளைத் தவிர இவ்விரு நாள்களிலும் மீனம்பாக்கம், கிண்டி பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள், ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்க தடை விதிக்கப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.