சென்னை

மனிதநேய மக்கள் கட்சி ஆா்ப்பாட்டம்

தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திச் சேவை

தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பல்வேறு மாநிலங்களில் அண்மையில் கிறிஸ்தவா்கள், தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலா் யாக்கூப், மாவட்டச் செயலா் ஜாகிா் உசேன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலா் வன்னியரசு, மாவட்டச் செயலா் சாமுவேல் எபினேசா், பெரியாா் செல்வன் ஆகியோா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், கிறிஸ்தவா்கள், தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்திய நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேல் நடைபெறாதவாறு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினா்.

சேலம் அருகே வளா்ப்பு நாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞா் கைது

இன்றைய மின் தடை

எடப்பாடியில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

ஈரோட்டில் வரும் 5-ஆம் தேதி விவசாயிகள் மாநாடு: மத்திய அமைச்சா் சிவராஜ்சிங் சௌகான் பங்கேற்பு

கே.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் ஏ.ஐ.சி.டி.இ. ஐடியா ஆய்வக திறப்பு விழா

SCROLL FOR NEXT