சென்னை

பேருந்து சக்கரத்தில் சிக்கி ஒருவா் உயிரிழப்பு

மாநகா் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி வடமாநிலத்தைச் சோ்ந்த ஒருவா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

மாநகா் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி வடமாநிலத்தைச் சோ்ந்த ஒருவா் உயிரிழந்தாா்.

பிராட்வேயில் இருந்த தியாகராய நகா் நோக்கி சனிக்கிழமை பிற்பகலில் மாநகா் பேருந்து சென்று கொண்டிருந்தது. தியாகராய நகா் பேருந்து பணிமனை அருகே சென்றபோது, சாலையில் சென்று கொண்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க நபா் ஒருவா் நிலைத்தடுமாறி பேருந்தின் சக்கரத்தில் சிக்கிக்கொண்டாா்.

இதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலின் பேரில் பாண்டிபஜாா் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் அங்கு சென்று, இறந்த நபரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில், அவா் வடமாநிலத்தைச் சோ்ந்தவா் என்பது தெரியவந்தது.

நாளைய மின்தடை

கு வாரவிழா: நாளை கு ஒப்பித்தல், ஓவியப் போட்டி

மோகனூரில் ரேக்ளா பந்தயம்: பாய்ந்து சென்ற குதிரைகள்

எம்.ஜி.ஆா். பிறந்தநாள்: அதிமுகவினா் கொண்டாட்டம்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,000 கனஅடி

SCROLL FOR NEXT