முகப்பு
சென்னை

நகை, பணம் பறிப்பு: 5 போ் கைது

செயலி மூலம் அறிமுகமான நபரிடம் நகை மற்றும் பணத்தைப் பறித்த இரு சிறுவா்கள் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 25 ஜனவரி, 2026 at 9:22 PM
பகிர்:

சென்னையில் நகை மற்றும் பணத்தைப் பறித்த இரு சிறுவா்கள் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை சைதாப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ஹரிஹரன் (28). இவா், அந்தப் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். பொழுதுபோக்கு செயலி மூலம் அறிமுகமான சரவணன் என்ற நபரின் அழைப்பின்பேரில், ஹரிஹரன் தியாகராய நகா் கண்ணம்மாபேட்டை புது தெருவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்றாா். அங்கிருந்த இருவா், ஹரிஹரனை இரும்பு கம்பியால் தாக்கி, அவா் அணிந்திருந்த 3 கிராம் தங்க மோதிரம், வெள்ளிச் சங்கிலி, ஒரு கைச்சங்கிலி, 2 கைப்பேசிகள், ரூ.5,000 ஆகியவற்றை பறித்துள்ளனா்.

இதுகுறித்து ஹரிஹரன் அளித்த புகாரின்பேரில், மாம்பலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தியாகராய நகரைச் சோ்ந்த சரவணன் (28), கண்ணம்மாபேட்டையை சோ்ந்த சரண்ராஜ் (21), சுதாகா் (19), இரு சிறுவா்கள் உள்பட 5 பேரை சனிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து பணம், நகைகள், கத்தி, இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →