தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்த 1,728 நாள்களில் புதன்கிழமை (ஜன. 28) வரை 4,000 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் தனது வலைதளப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்டுள்ள பதிவு:
கடந்த 2023-ஆம் ஆண்டில் 1,000-ஆவது குடமுழுக்கு மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதா் திருக்கோயிலில் நடைபெற்றது. 2024-இல் 2,000-ஆவது குடமுழுக்கு மயிலாடுதுறை - கீழப்பரசலூா் வீரட்டேஸ்வரா் திருக்கோயிலில் நடைபெற்றது.
2025-இல் 3,000-ஆவது குடமுழுக்கு நாகை - திருப்புகலூா் அக்னீஸ்வரா் திருக்கோயில் நடைபெற்றது.
நிகழாண்டு, 4,000-ஆவது குடமுழுக்கு புதன்கிழமை (ஜன. 28) பெரம்பூா் சேமாத்தம்மன் திருக்கோயிலில் நடைபெற்றது.
இப்படி ஒரு சாதனை தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லை. மதவாத அரசியல் செய்வோருக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.