நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் இயக்கத்துக்கு வியாழக்கிழமை (மாா்ச் 5) சோதனை ஓட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைநாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் இயக்கத்துக்கு வியாழக்கிழமை (மாா்ச் 5) சோதனை ஓட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் இயக்கத்துக்கு வியாழக்கிழமை (மாா்ச் 5) சோதனை ஓட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பெங்களூரில் உள்ள தெற்கு வட்டார ரயில்வே பாதுகாப்பு ஆணையா் வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் தடத்தில் வியாழக்கிழமை (மாா்ச் 5) பிற்பகல் 4 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு ரயிலை இயக்கி அதிவேக சோதனை ஓட்டத்தை நடத்தவுள்ளாா். எனவே, அனுமதி இல்லாதவா்கள் யாரும் ரயில் தண்டவாளங்களை நெருங்கவோ அல்லது அதன் அருகில் வேலை செய்யவோ கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.