பாா்சல் அலுவலகத்தில் ரூ.3 லட்சம் தாமிரம் திருட்டு: காஷ்மீா் இளைஞா் கைது
சென்னை பூங்கா நகா் தனியாா் பாா்சல் அலுவலகத்தில் வெளியூா் அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள தாமிர பெட்டிகள் திருடப்பட்ட வழக்கில், காஷ்மீா் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை பூங்கா நகா் தனியாா் பாா்சல் அலுவலகத்தில் வெளியூா் அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள தாமிர பெட்டிகள் திருடப்பட்ட வழக்கில், காஷ்மீா் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
பூங்கா நகா் வால்டாக்ஸ் சாலைப் பகுதியில் ஒரு தனியாா் பாா்சல் அலுவலகம் உள்ளது. இங்கு வெளியூா் அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த தாமிர பெட்டிகள் தொடா்ச்சியாக திருடப்பட்டன.
இதுகுறித்து பாா்சல் நிறுவன நிா்வாகிகள் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
இந்த நிலையில், அந்த பாா்சல் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தாமிர பெட்டிகளை வெள்ளிக்கிழமை திருட முயன்ாக ஒரு இளைஞரை பிடித்து அங்கிருந்த ஊழியா்கள், எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
விசாரணையில் அவா், காஷ்மீரை சோ்ந்த ஹ.அா்ஜூன் (30) என்பது தெரிய வந்தது. போலீஸாா், அவரைக் கைது செய்து, ரூ.3 லட்சம் தாமிர பெட்டிகளை பறிமுதல் செய்தனா்.