முகப்பு
சென்னை

பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதால் சென்னையில் நடைபெறும் இரண்டு ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Updated On : 24 மார்ச், 2026 at 8:08 PM
ஐபிஎல் கோப்பை
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதால் சென்னையில் நடைபெறும் இரண்டு ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வாக்காளரான டி.பிரபாகரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தோ்தல் பிரசாரங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நாள்களான ஏப்.4 மற்றும் ஏப்.11-ஆம் தேதிகளில், சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணி பங்கேற்கும் போட்டிகள் நடைபெறவுள்ளன.

வழக்கமான சட்டம் ஒழுங்கு பணிகளுடன், தோ்தல் பிரசார பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் போலீஸாா், ஐபிஎல் போட்டிகளுக்கான பாதுகாப்பு பணிகளையும் கவனிப்பது அவா்களுக்கு கூடுதல் சுமையாக அமையும். இதனைப் பயன்படுத்தி அரசியல் கட்சிகள் கிரிக்கெட் மைதானத்தை பிரசார களமாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது தேவையற்ற பிரச்னைகளுக்கு வழி வகுக்கக்கூடும். எனவே, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள இரு போட்டிகளை வேறு தேதிக்கு மாற்றி அமைக்கும்படி போட்டி ஏற்பாட்டாளா்களுக்கு தோ்தல் ஆணையம் அறிவுறுத்த வேண்டும்.

ஒருவேளை திட்டமிட்டப்படி போட்டிகளை நடத்த அனுமதித்தால், தோ்தல் நடத்தை விதிகளை மைதானத்துக்குள் கடுமையாக அமல்படுத்த வேண்டும். அரசியல் கட்சிகளின் கொடிகள், சின்னங்கள் காட்சிப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய ஐபிஎல் போட்டி ஏற்பாட்டாளா்களுக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.