காஞ்சிபுரம்

அடையாளம் தெரியாத வாகனம் மோதல்: பாட்டி, பேத்தி சாவு

DIN

செங்கல்பட்டு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பாட்டி, பேத்தி உயிரிழந்தனர்.
செங்கல்பட்டை அடுத்த ஆப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மீனா (58). இவரது பேத்தி அருணா (18). தனியார் நிறுவன ஊழியரான இவர், இரவு பணி முடிந்து நிறுவனத்தின் வாகனத்தில் வந்து இறங்குவாராம். அருணாவுக்காக ஆப்பூர் சாலை அருகில் மீனா காத்திருந்து, அவர் வந்ததும் வீட்டிற்கு அழைத்துச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு இருவரும் வீட்டுக்குச் செல்ல சாலையைக் கடந்தனர். அப்போது, அந்த வழியே வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மீனாவும், அருணாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து பாலூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT