காஞ்சிபுரம்

மலைப்பட்டுக்கு புதிய மின்மாற்றி: எம்எல்ஏ இயக்கி வைத்தார்

DIN

மலைப்பட்டு கிராமத்தில் புதிய மின்மாற்றியை எம்எல்ஏ பழனி வெள்ளிக்கிழமை இயக்கி வைத்தார்.
குன்றத்தூர் ஒன்றியம், மலைப்பட்டு கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இப்பகுதியில் இருந்த பழைய மின்மாற்றி சரியாக இயங்காமல், குறைந்த அழுத்த மின்சாரமே விநியோகமானதால் மின்சாதனப் பொருள்கள் அடிக்கடி பழுதடைந்து கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இதையடுத்து புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரி வந்தனர்.
இந்நிலையில் படப்பை மின்வாரிய அலுவலகத்தின் மூலம் புதிய மின்மாற்றி கடந்த சில தினங்களுக்கு மலைப்பட்டில் அமைக்கப்பட்டது. இதனை ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ கே.பழனி வெள்ளிக்கிழமை இயக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் எழிச்சூர் ராமசந்திரன், மலைப்பட்டு முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

SCROLL FOR NEXT