காஞ்சிபுரம்

குண்டர் தடுப்பு சட்டத்தில் ரௌடியின் கூட்டாளி கைது

DIN

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரௌடி ஸ்ரீதரின் கூட்டாளி சுரேஷ், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ஓர் ஆண்டுக்கு சிறையில் அடைக்கப்பட்டார். 
காஞ்சிபுரத்தை அடுத்த முசரவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (37) (எ) மிலிட்டரி சுரேஷ். இவர் பிரபல ரௌடி ஸ்ரீதரின் கூட்டாளி. இவர் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். இதன்காரணமாக, சுரேஷை போலீஸார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். 
இந்நிலையில், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கைது செய்ய வேண்டும் என பாலுசெட்டி காவல் ஆய்வாளர் பிரபாகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானிக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியருக்கு எஸ்.பி. குண்டர் சட்டத்தின்கீழ் சுரேஷை கைது செய்ய பரிந்துரை செய்ததை ஆட்சியர் பொன்னையா ஏற்று, சுரேஷை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். 
ஆட்சியரின் உத்தரவின் பேரில், வேலூர் சிறையில் இருக்கும் சுரேஷிடம் இந்த உத்தரவுக்கான நகல் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT